Spread the fire

Please send protest informations, photos and updates to tnstudentsprotest(at)gmail.com

Give them your support

Chennai – R. Thirumalai - 9944224935, Dinesh - 9791162911, Karthi - 9791156568 | Tiruchy – Siva – 9940953705, Dinesh - 9080808068 | Kumbakonam - 9865370777 | Erode – Rajkumar – 8870422092, Prakash - 9976916787 | Coimbatore – Dinesh - 9944599425 | Salem – Bharathi - 9894363191 | Ramanathapuram – Abdul Kathar - 9942915913 | Dindugul – Ravi - 8220132507 | Madurai – Venkatraman - 9894438555 | Sivagangai – Sivaji Gandhi - 9865619350 | Viluppuram – A.V. Saravanan - 9443112017 | Thiruvallur – Dilipan - 9840150597 | Kanchipuram – Ansari - 9884715642, Doss - 8973061609 | Thanjavur – Gowthaman – 9786603669

Wednesday 10 April 2013

தினசரி இரண்டு நிமிட மௌனப்போராட்டம்


சென்னை முஹம்மது சதக் ஏஜே காலேஜ் ஆப் இஞ்சினீரிங்கில் மாணவர்கள் இரண்டு நிமிட மௌனப்போராட்டம் தினசரி அனுசரிக்கப்படுகிறது.
அனைத்துக் கல்லூரி மாணவர்களும் இந்த மௌனப்போராட்டத்தில் ஈடுபட வேண்டும். சதிஸ் 9092069617

Monday 8 April 2013

விருத்தாச்சலத்தில் மாணவர் பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது

தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பில் விருதாச்சலத்தில் பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.  

சிங்களருடன் சேர்ந்து தமிழர்கள் இணக்கமாக வாழவேண்டும் என எந்த இந்திய அரசியல்வாதியாவது கூறினால் செருப்பாலே அடிப்போம் . பொதுக்கூட்டத்தில் மாணவர்கள் ப்ரொஜெக்டர் மூலம் பெரிய திரையில் ஈழ இனப்படுகொலையை திரையிட்டு காட்டி இனி இந்த ப்ரொஜெக்டரை விலைக்கு வாங்கி ஒவ்வொரு கிராமமாக சென்று திரையிட்டு காட்டி மக்களுக்கு உண்மையை உணர்த்துவோம் என்றும் அறிவித்துள்ளர்கள், மேலும் பொதுகூட்டத்தை பார்த்தும் பார்க்காத மாதிரி சென்றவர்கள் கையில் உப்பை கொடுத்து சோற்றில் போட்டு சாப்பிடுங்கள் அப்படியாவது சூடு, சொரணை வரட்டும் என முகத்தில் அடித்தாற்போல் ஆவேசமாக மாணவர்கள் கூறினார்கள். மாணவர்களின் தூய்மையான தன்னலமற்ற போராட்டத்தை எந்த அமைப்புகளோ, கட்சிகளோ தங்களுக்கு சாதகமாக பயன்படித்தினால் அது சாப்பிட்டுவிட்டு தெருவில் வீசும் எச்சிலையை எடுத்து நக்குவதற்க்கு சமம் என உணர்ச்சியுடன் பேசினார்கள் மாணவர்கள். தமிழர்களின் ஒரே தீர்வான தமிழீழத்தை அடையும் வரை நாங்கள் எந்த வகையிலும் சமாதானமாக மாட்டோம், தமிழ் எங்கள் குருதி, ஈழம் அது உறுதி என மாணவர்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
தொடர்பிற்கு
மாறன் : 99522 24112
பிரவின் : 95000 78349




Sunday 7 April 2013

திருச்சியில் நடைபெற்றுவரும் மாபெரும் மாணவர் பொதுக்கூட்டம்

"தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினால் " தற்போது(07/04/2013-ஞாயிறு மாலை) திருச்சியில்- சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றுவரும் "மாபெரும் மாணவர் பொதுக்கூட்டத்தின்" தொடக்க நிகழ்வான கலைநிகழ்ச்சியின் காட்சிகள்..

Student uprising becomes theme of cultural event in Canada

As published in TamilNet, Sunday, 07 April 2013
The recent student upsurge demanding Tamil Eelam as the solution to the national question of Eezham Tamils became the main theme of a live show staged by the second-generation diaspora students in Canada last Sunday. The programme, titled “I’lantha’lir – Discover Your Roots”, through multiple stage-acts, offered a live narration of the history of the Tamil liberation struggle, divided into notable time periods within the history.



இலங்கை பொருட்களை புறக்கணிப்போம். சென்னையில் கையெழுத்துப் பரப்புரை

இலங்கை பொருட்களை புறக்கணிப்போம் என்ற பரப்புரை தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் இன்று மெரீனா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டது . தற்போது தமிழகத்தில் பெரும்பாலான கடைகளில் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பிஸ்கட் , இனிப்புகள் , பழங்கள் , இறைச்சி , பருத்தி ஆயத்த ஆடைகள் முதலிய பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளது . குறிப்பாக இந்திய அரசு இலங்கைக்கு வரிச் சலுகை அளித்த பின்பு , இலங்கையில் இருந்து நிறைய பொருட்கள் தமிழக சந்தைக்கு வந்த வண்ணம் உள்ளது . இதனால் இலங்கை பொருளாதாரம் பலம்பெரும் வாய்ப்பு உள்ளது . இவ்வாறு இலங்கையின் பொருளாதாரம் பலம்பெற்றால் , இலங்கை அரசு மென்மேலும் ஆயுதம் வாங்கிக் குவிக்க அந்த பணத்தை செலவிடும் . மேலும் இலங்கை ராணுவத்திற்கு இந்த பணம் பயன்படும். ஏற்கனவே தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவம் நிரந்தர முகாமிட்டு தமிழர்களுக்கு கொடும் துன்பம் இழைக்கிறது. இந்த நிலையில் இலங்கையின் ஏற்றுமதி பெருகினால் அது இலங்கைக்கு நன்மையை பயக்குமே அன்றி தமிழர்களுக்கு நன்மை பயக்காது . அதனால் இலங்கையின் ஏற்றுமதி சந்தையை முடக்குவது தான் இலங்கையின் மீதான பொருளாதாரத் தடையை வலுப்படுத்தும் என்ற அடிப்படையில் , இலங்கையின் உற்பத்தி பொருட்களை தமிழக தமிழர்கள் யாரும் வாங்க வேண்டாம் என்ற பரப்புரையில் தமிழர் பண்பாட்டு நடுவம் ஈடுபட்டது . ஏற்கனவே இதுபோன்ற பல பரப்புரையில் நாம் ஈடுபட்டிருந்தாலும் , இம்முறை தமிழக மக்களுக்கு நல்லதொரு விழிப்புணர்வை கொடுக்க முடிந்தது .

Saturday 6 April 2013

புதுவையில் மாணவர்களின் தொடர் போராட்டம்


புதுவையில் தொடர் போராட்டதை நடத்தியும் ,மாணவர்களின் போராட்டத்தை வழிநடத்திய சட்டகல்லூரி மாணவர்கள் கௌதம பாஸ்கரன் ,பிரபு , பீமாராவ் , மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன் ஆகியோர் இன்று (05.04.13) காவல்துறையால் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்றகாவலில் அடைக்கப்பட்டனர் , மேலும் 11 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இன்று ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசை எதிர்த்து தூர்தஷன் வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர். ஏற்கனவே கலால்துறை அலுவலகம் , இமிகிரேஷன் அலுவலகம், தந்தி தொலைத்தொடர்பு அலுவலகம், தபால் தந்தி அலுவலகம் என அனைத்து மத்திய அரசு அலுவலகங்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் காவல்துறை போராட்டத்தை முன்னின்று நடத்தும் சட்டகல்லூரி மாணவர்களான கௌதம பாஸ்கரன்,தமிழ் இளைஞர் கூட்டமைப்பு விழுப்புரம் பிரபு , மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன் ஆகியோரை குறி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது .


Norwegian Tamils today protested in front of Indian embassy in Oslo

World wide Tamils continue to protest in support of Tamil Nadu students. Norwegian Tamils today protested in front of Indian embassy in Oslo in support of TN students and also ask the Indian government to respect and implement the resolutions passed in TN assembly including helping to conduct a referendum for Tamil Eezham.


Silent Revolution by Students' Federation For Free Eelam - SFFE

Students' Federation For Free Eelam - SFFE staged their silent protest in front of The Triumph of Labour  statue near Marina Beach, Chennai  They protest against Sri Lanka for its structural genocide and against Indian govt. for supporting it.

They also demanded Sun group to drop Sri Lankan players in their Hyderabad Sun Risers IPL franchise. Students wore black ribbon closing their mouth and few students mock the sufferings of Eelam Tamils. Students Coordinator V Prabhakaran leads the protest, he said if our feelings and sentiments been continuously ignored we will stage lock out procession across all over Tamil Nadu.


Friday 5 April 2013

Students Silent Revolution Started

Loyola college students started their silent revolution in their classes. Students keeps silent for two minutes daily as homage to the Tamil peoples killed by Sri Lanka.

மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்தக்கோரியும் பெல்யிஜத்தில் இளையோர்கள் உண்ணாவிரதம்

பெல்யிஜம் Antwerpen மாநகரில் 03.04.2013 புதன்கிழமை நேற்று முந்தினம் பெல்ஜியம் இளையோர்களான சந்தோஷ் -வாசு என்பவர்களால்

Antwerpen Central Station முன்பாக தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆதரவாகவும் தமிழீழம் மீதான பொதுவாக்கெடுப்பு நடத்த ஐநாவை பெல்ஜியம் வலியுறுத்த கோரியும் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.